அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 142:
 
=='''தென்றல்'''==
<poem>
===மென்காற்றும் வன்காற்றும்===
 
===<small>மென்காற்றும் வன்காற்றும்</small>===
அண்டங்கள் கோடி கோடி
::அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
::கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச்
::செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
::நோகாது நுழைந்தும் செல்வாய்! (11)
<br>
===<small>தென்னாடுபெற்ற செல்வம்</small> ===
உன்னிடம் அமைந் திருக்கும்
::உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
::தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
::தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
::எந்நாட்டில் தெரியச் செய்தாய்? (12)
<br>
===<small>தென்றலின் நலம்</small>===
குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
::பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
::மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
::கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
::வரவினை வாழ்த்தா ருண்டா? (13)
<br>
===<small>அசைவின் பயன்</small>===
உன்அரும் உருவம் காணேன்
::ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
::சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
::அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
::இணைத்திடல் அன்பே அன்றோ? (14)
<br>
===<small>தென்றலின் குறும்பு</small>===
உலைத்தீயை ஊது கின்றாய்
::உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
::மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
::குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
::விலக்கினும், விலக்கார் உன்னை! (15)
<br>
===<small>குழந்தையும் தென்றலும்</small>===
இழந்திட்டால் உயிர்வா ழாத
::என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
::குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
::குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
::தன்னையு ம் அசைப்பாய் வாழி. (16)
<br>
===<small>தென்றல் இன்பம்</small>===
இருந்தஓர் மனமும், மிக்க
::இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
::கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
::மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
::பறந்தோடிப் பாடு கின்றாய்! (17)
<br>
===<small>தென்றலின் பயன்</small>===
எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
::எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
::வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
"எழுதிய தாளை நீ ஏன்
::கிளப்பினை" என்று கேட்டேன்,
"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
::மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை! (18)
<br>
===<small>தென்றலிற்கு நன்றி</small>===
கமுகொடு, நெடிய தென்னை,
::கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
::உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
::தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
::கனவிலும் மறவேன் அன்றோ? (19)
<br>
===<small>தென்றலின் விளையாட்டு</small>===
களச்சிறு தும்பி பெற்ற
::கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
:கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
::பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
::கிழிக்கின்றாய் தென்ற லேநீ! (20)
</poem>
 
=='''காடு'''==
"https://ta.wikisource.org/wiki/அழகின்_சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது