அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,217:
==பட்டணம்==
எத்தனை வகைத் தெருக்கள்!
::என்னென்ன வகை இல்லங்கள்!
ஒத்திடும் சுண்ண வேலை
::உயர் மரவேலை செய்யும்
அத்திறம் வேறே; மற்றும்
::அவரவர்க் கமைந்த தான
கைத்திறம் வேறே என்று
::காட்டின கட்டிடங்கள்.
<br>
இயற்கையின் உயிர்கட் குள்ளே
::மனிதன்தான் எவற்றி னுக்கும்
உயர்ச்சியும், தான் அறிந்த
::உண்மையை உலகுக் காக்கும்
முயற்சியும், இடைவி டாமல்
::முன்னேற்றச் செயலைச் செய்யும்
பயிற்சியும் உடையான் என்று
::பட்டணம் எடுத்துக் காட்டும்.
<br>
நடுவினிற் புகையின் வண்டி
::ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் 'தம்மில்
::இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து
::கணக்கற்ற பொருள் குவிக்கும்
படைமக்கள் சிட்டுப் போலப்
::பறப்பார்கள் பயனை நாடி!
<br>
வாணிகப் பண்டக சாலை
::வைத்துள்ள பொருள்கள் தாமும்,
காண் எனக் காட்டி விற்கும்
::அங்காடிப் பொருள்கள் தாமும்,
வீணாளைப் பயன் படுத்தும்
::வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,
காணுங்கால் மனிதர் பெற்ற
::கலைத்திறம் காணச் செய்யும்.
<br>
உள்ளத்தை ஏட்டால் தீட்டி
::உலகத்தில் புதுமை சேர்க்கும்
கொள்கைசேர் நிலைய மெல்லாம்
::அறிஞரின் கூட்டம் கண்டேன்;
கொள்கைஒன் றிருக்க வேறு
::கொள்கைக்கே அடிமை யாகும்
வெள்ளுடை எழுத்தா ளர்கள்
::வெறுப்புறும் செயலும் கண்டேன்.
<br>
உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்
::உயர்வழக் கறிஞர் தம்மை
விண்வரை வளர்ந்த நீதி
::மன்றத்தில் விளங்கக் கண்டேன்;
புண்பட்ட பெருமக் கட்குப்
::பொதுநலம் தேடு கின்ற
திண்மைசேர் மன்றிற் சென்றேன்
::அவரையே அங்கும் கண்டேன்.
<br>
மாலைப்போ தென்னும் அன்னை,
::உழைப்பினால் மடிவார் தம்மைச்
சாலிலே சாரா யத்தால்
::தாலாட்டும் கடையின் உள்ளே
காலத்தைக் களியாற் போக்கக்
::கருதுவோர் இருக்கக் கண்டேன்,
மாலையில் கோழி முட்டை
::மரக்கறி ஆதல் கண்டேன்.
<br>
இயற்கையின் எழிலை யெல்லாம்
::சிற்றூரில் காண ஏலும்!
செயற்கையின் அழகை யெல்லாம்
::பட்டணம் தெரியக் காட்டும்!
முயற்சியும் முழுது ழைப்பும்
::சிற்றூரில் காணுகி ன்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
::பட்டணத் திற்பார்க் கின்றேன்!
<br>
வருநாளின் நாடு காக்க
::வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,
திருநாளின் கூட்ட மாகத்
::தெருஓரம் சுவடி யோடு,
பெருநாளைப் பயன்நா ளாக்கும்
::பெரும்பெருங் கழகம் நோக்கி
ஒருநாளும் தவறிடாமல்
::வரிசையாய் உவக்கச் செல்வார்!
<br>
கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
::கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
::நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
::தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
::உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
<br>
==தமிழ்==
|