பக்கம்:புகழ்மாலை.pdf/58: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& புகழ் மாலை மாண்புடைய மூவேந்தர் சிறப்பு மிக்க வரலாற்றை உரைக்காமல், வடக்கு நாட்டுப் பாண்டவரின் பெருமைதனைப் பற்றிப் பேசும் பண்டிதர்கள் என்பவர்கள், இந்த நாட்டின் தூண்மனிதர் சுணையற்ற தமிழர்-என்று சொல்லுதற்கு அஞ்சாத புலவர் இங்கு, ஆண்டவனைக் கருங்கல்லில் பாரீர் என்னும் ஆரியத்தின் சூழ்ச்சிதனை வீழ்த்தும் ஆசான்! விழிக்காக, எழில்காத்துக் கொண்டிருக்கும்; விதைக்காக, வயல்காத்துக் கெண்டிருக்கும்; இழைக்காகத், தறிகாத்துக் கொண்டிருக்கும்; இசைக்காக, செவிகாத்துக் கெண்டிருக்கும்; மழைக்காகப், பயிர்காத்துக் கொண்டிருக்கும்:” வாடாத சான்றோரின் வழியில் வந்த பிழையில்லாப் பேரறிஞர் இவர்சொல் கேட்கப் பெரும்புலவர் தினந்தோறும் காத்திருப்பர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/58&oldid=293783" இலிருந்து மீள்விக்கப்பட்டது