பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 329:
:பைங்கிளி மிழற்றும் பிாலார் செழுநகர்த்
:தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 //
 
:கொடுவிலெயினர் கொள்ளை யுண்ட
:வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
:வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
:மருங்கடி வரைப்பினூர்கவி னழியப்
:பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற
:மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
:வான்வீழ்க் குவனே வளிமாற்று வனெனத்
:தான்முன்னிய துறைபோகலிற்
:பல்லொளியர் பணிபொடுங்கத்
:தொல்லருவாளர் தொழில்கேட்ப // 275 //
 
:வடவர் வாடக் குடவர் கூம்பத்
:தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
:மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
:மாத்தானை மறமொய்ம்பிற்
:செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்
:புன்பொதுவர் வழிபொன்ற
:விருங்கோவேண் மருங்குசாயக்
:காடுகொன்று நாடாக்கிக்
:குளந்தொட்டு வளம்பெருக்கிப்
:பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
:கோயிலொடு குடிநிறீஇ
:வாயிலொடு புழையமைத்து
:ஞாயிறொறும் புதைநிறீஇப்
:பொருவேமெனப் பெயர்கொடுத்
:தொருவேமெனப் புறக்கொடாது // 290 //
 
:திருநிலைஇய பெருமன்னெயின்
:மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
:விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
:பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
:பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு // 295 //
 
:முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
:செஞ்சாந்து சிதைந்த மாப்பினொண்பூ
:ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
:றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
:வேலினும் வெய்ய கானமவன் // 300 //
 
:கோலினுந் தண்ணிய தடமென் றோளே.
"https://ta.wikisource.org/wiki/பட்டினப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது