பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/572: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 மாணிக்கத்தை வைத்திருப்பவன் சொல்வது போலக் சொல்கிருர், அவரும் இறைவனகிய மாணிக்கத்தை ஒரு துணியினலே போர்த்து அதனுள்ளே அதை அமைத்திருக்கிருராம். வெறும் துனியா அது? அன்பையே போர்வையாக்கி அதனல் போர்த்து அமைத்தாராம். இப்போது இறைவன் அன்பென் னும் போர்வைக்குள் அடங்கி நிற்கிருன். அன்புஎன்னும் போர்வை யதருலே போர்த்து அமைத்து. பிறகு ஓரிடத்தில் அடைத்துவிட்டாராம். தானே தேடிப் பெற்றுத் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட மாணிக்கத்தை ஒருவன் தன் விருப்பம் போலப் பாதுகாத்து வைத்திருப்பான். "நீ ஏன் இதை இப்படி ஒளித்து வைத்திருக்கிருய்?” என்று கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. 'என்னுடைய பொருள் இது. இதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும், உனக்கு என்ன தெரியும்? நான் அதை உன் கண்ணில் காட்ட மாட்டேன். அதை யாராலும் காண முடியாது. நான் நல்ல பாதுகாப்பில் வைத்திருப்பதளுல் அதனைக் காண வல்லார் யார் இருக்கிருர்கள்?’ என்று அவன் கேட்பது போலக் கேட்கிருர் அம்மையார். இறைவனைத் தம்முடைய நெஞ்சினுள்ளே அடைத்து வைத்துவிட்டார். அத்தகைய சிறப்பான உரிமையை அவர் பெற்றிருக்கிருர், அவருடைய நெஞ்சில் வேறு எதுவும் இல்லை. எந்தப் பொரு ளுக்கும் இடம் கொடாத அங்கே, அந்தரங்கமாக இறைவன் என்னும் மாணிக்கத்தை அடைத்து வைத்திருக்கிருர், - _ சீர்வல்ல தாயத்தால் ங்ாமும் தனிகெஞ்சின் உள்ளடைத்து. "யாரும் காணக்கூடாது என்ற எண்ணத்தால் ஒரு. மாயம் பண்ணி அந்த மாயத்தினல் எம் தனியான நெஞ்சின் உள்ளிடத்தே மறைத்து வைத்திருக்கிருேம்” என்கிரு.ர்.