பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/589: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:57, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

579 (படி-பூமி. லேம்-வேகும்; இடைக்குறை. திசை-திசை யிலுள்ள பொருள்கள்; ஆகுபெயர். இடிக்கின்-இடிபோல முழங்கில்ை; தன் கொம்பினுல் இடித்தால் என்றும் பொருள் கொள்ளலாம். உலகு-உலகத்தில் உள்ள உயிர்கள். ஏங்கும்என்ன ஆகுமோ என்று எண்ணி நையும். அடுக்கல்-மலை. மலை யொடு பொருவதைச் சொன்னதால், ஏறு என்பது ஆண் சிங்கத்தைக் குறித்தது. ஆன் என்பது பசுமாட்டின் பொது: ஏறு, அவற்றின் ஆண். பொன் ஒப்பாய்-நிறத்தால் பொன்னை ஒப்பவனே; 'பொன் வரையே போல்வான்” (8), மேனி, செம்பொன் அணிவரையே போலும்” (39), ஆங்கவன்றன் பொன்னுருவில்” (58), 'பொன் விலங்கல் போலாம்: (60), ஆம்பொன் உருவடிவில்” (67), "தன்போலும் பொற் குன்றும்” (83) என்று பல இடங்களிலும் இதை அம்மை யார் சொல்வதைக் காண்க. அடியவர்கள் தம் உள்ளத்தே பொன்னைப் போல் பொதிந்து வைத்தலால், 'பொன் ஒப்பாய்’ என்ருர் எனலும் ஆம், ஒகாரங்கள்: ஐயம். ஒன்ரு-ஒன்ருக; ஒரே விடையாக. 'பொன் ஒப்பாய், நின் ஏறு இத்தகையது. அது சிங்கமோ, ஆனேருே, இடியோ? ஒன்றைச் சொல் என்ருர்.1 அற்புதத் திருவந்தாதியில் வரும் 100-ஆவது பாட்டு இது.