திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 22.ஒப்புரவறிதல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்து...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
===அதிகாரம் 22 ஒப்புரவறிதல்===
 
வரி 4 ⟶ 7:
 
;அதிகார முன்னுரை: அஃதாவது, உலகநடையினை அறிந்து செய்தல். உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந்தன்மைத்து ஆகலின், ஒப்புரவு அறிதல் என்றார். மேல் மனமொழிமெய்களால் தவிரத்தகுவன கூறினார். இனிச் செய்யத்தகுவனவற்றுள் எஞ்சிநின்றன கூறுகின்றார் ஆகலின், இது தீவினையச்சத்தின்பின் வைக்கப்பட்டது.
 
 
==திருக்குறள் 211 (கைம்மாறு)==
வரி 18 ⟶ 20:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: என்னாற்றும் என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிருந் தன்மைய அல்ல என்பது கடப்பாடு என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.
 
 
==திருக்குறள் 212 (தாளாற்றித்)==
 
 
;தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
;வேளாண்மை செய்தற் பொருட்டு
 
 
::தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
::வேளாண்மை செய்தல் பொருட்டு.
 
 
;பரிமேலழகர் உரை (இதன் பொருள்): தக்கார்க்கு= தகுதியுடையார்க்கு ஆயின்;
:தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம்= முயறலைச் செய்து ஈட்டிய பொருள் முழுதும்;
:வேளாண்மை செய்தல் பொருட்டு= ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறர்க்கு உதவாதார் பொருள் போலத் தாமே உண்டற் பொருட்டும், வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.
 
==திருக்குறள் 213 (புத்தேளுலகத்து)==
 
 
;புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
;யொப்புரவி னல்ல பிற.
 
 
::புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
வரி 50 ⟶ 45:
;பரிமேலழகர் உரை (இதன் பொருள்): புத்தேள் உலகத்தும் ஈண்டும்= தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்;
:ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது= ஒப்புரவு போல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம் : ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லாரும் ஒருதன்மையர் ஆதலான் புத்தேள் உலகத்து அரிது ஆயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதுஒன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெறற்கரிது என்று பாடம்ஓதிப் பெறுதற்குக் காரணம்அரிது என்று உரைப்பாரும் உளர்.
:இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 214 (ஒத்ததறிவான்)==
வரி 66 ⟶ 59:
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): உயிர்வாழ்வான் ஒத்தது அறிவான்= உயிரோடுகூடி வாழ்வானாவான் உலகநடையினை அறிந்து செய்வான்;
:மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்= அஃதறிந்து செய்யாதவன், உயிருடையனேயாயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும் என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயிரின் அறிவும் செயலும் காணாமையின், செத்தாருள் வைக்கப்படும் என்றார்.
வரி 72 ⟶ 64:
 
==திருக்குறள் 215 (ஊருணிநீர்)==
 
 
;ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
;பேரறி வாளன் திரு
 
 
::ஊர் உணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
::பேர் அறிவாளன் திரு
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): உலகு அவாம் பேரறிவாளன் திரு= உலகநடையை விரும்பிச் செய்யும் பேரறிவினையுடையவனது செல்வம்;
:ஊருணி நீர் நிறைந்தற்று= ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணுங்குளம் நீர் நிறைந்தாற் போலும் என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. பாழ்போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.
 
 
==திருக்குறள் 216 (பயன்மரம்)==
 
 
;பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
;நயனுடை யான்கட் படின்
 
 
::பயன் மரம் உள் ஊர்ப் பழுத்தற்றால் செல்வம்
::நயன் உடையான்கண் படின்
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): செல்வம் நயன்உடையான்கண் படின்= செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்;
வரி 104 ⟶ 88:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உலகநீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின், அதனையே நயன் என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடு்க்கும் என்பதாம்.
 
 
==திருக்குறள் 217 (மருந்தாகித்)==
 
 
;மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
;பெருந்தகை யான்கட் படின்
 
 
::மருந்து ஆகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
::பெரும் தகையான் கண் படின்
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): செல்வம் பெருந்தகையான் கண் படின்= செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தலைமை உடையான்கண்ணே படுமாயின்;
:மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று= அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும், என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தப்புதலாவது= கோடற்கரிய இடங்களின் நின்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை. தன்குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.
 
:இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 218 (இடனில் பருவத்தும்)==
 
 
;இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
வரி 134 ⟶ 111:
::இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
::கடன் அறி காட்சியவர்
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்= செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்;
வரி 140 ⟶ 116:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறவெல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.
 
 
==திருக்குறள் 219 (நயனுடையான்)==
 
 
;நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
;செய்யா தமைகலா வாறு
 
 
:நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
:செய்யாது அமைகலா ஆறு
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்= ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது;
வரி 157 ⟶ 129:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தான் நுகர்வன நுகரப்பெறாமை அன்று என்பதாம்.
 
 
:இவை இரண்டுபாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 220 (ஒப்புரவினால்)==
 
 
;ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
;விற்றுக்கோட் டக்க துடைத்து
 
 
::ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
::விற்றுக்கோள் தக்கது உடைத்து
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒப்புரவினால் வரும் கேடு எனின்= ஒப்புரவு செய்தலான், ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின்;
:அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து= அக்கேடுதன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து, என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தன்னை விற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லையன்றே; இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி.
வரி 181 ⟶ 147:
:இதனால் ஒப்புரவினால் கெடுவது கேடுஅன்று என்பது கூறப்பட்டது.
 
===திருவள்ளுவர் இயற்றிய முப்பால் நூலின் '''ஒப்புரவறிதல்''' அதிகாரத்திற்குப் பரிமேலழகர் வரைந்த உரை முற்றுப்பெற்றது===
 
===திருவள்ளுவர் இயற்றிய முப்பால் நூலின் '''ஒப்புரவறிதல்''' அதிகாரத்திற்குப் பரிமேலழகர் வரைந்த உரை முற்றுப்பெற்றது===
 
 
:[[திருக்குறள் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]] :[[]] :[[]] :[[]]