பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 844:
 
===2===
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே (21)
 
என்செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன்செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங் ஙனமே வந்து மூண்டதுவே (22)
 
திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடி வந்து
பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்
கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை
உருவாக்கிக் கொள்ள வல்லோ இங்ஙனேசிவன் உற்றதுவே (23)
 
விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும்இரேன் மெய்கெடாத நிலை
தொட்டேன் சகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும் பரம் என்னிடத்தேவந்து இங்கு எய்தியதே (24)
 
அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்றுகண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே (25)
 
எரிஎனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரிஎனக்கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரிஎனக்கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறு எனக்கே (26)
 
அண்ணல்த ன்வீதி அரசிருப்பாகும் அணி படையோர்
நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும் நண்ணும் இவ்வூர்
துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான சுகமுமெல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே (27)
 
என் பெற்ற தாயாரும் என்னைப் பிண மென்று இகழ்ந்து விட்டார்
பொன்பெற்ற மாதரும் போ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே (28)
 
கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப்
பொறை யுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந் திண்ணையும்
தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே (29)
 
எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே (30)
 
வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல் நாறும் இந்திரியச்சேறு சிந்திப்
பாய் நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே (31)
 
உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்த சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே (32)
 
ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால்
வாதைப் பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே (33)
 
சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று
கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மன மடங்கப்
பரப்பற்றி ருப்பதன் றோ பரமா பரமானந்தமே (34)
 
பேய்போல் திரிந்து பிணம்போல்கிடந்து இட்ட பிச்சை யெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்
தாய்போல் கருதித் தமருபோல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண் டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே (35)
 
விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீணனிட்ட
முடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்
சடக்கே கருவி தளர்ந்துவிட்டால் பெற்றத் தாயுந்தொடாத்
தொடக்கே உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகமெனக்கே (36)
 
அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை
தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பழனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ சலியாது இரு என் ஏழைநெஞ்சே (37)
 
செல்வரைப் பின் சென றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக்காட்டி பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே (38)
 
ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம்படங்கப்
போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந் திண்ணையில்
சாரீர் அனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகம்நகைக்க
ஏரீர் உமக்கு அவர் தாமே தருவர் இணையடியே (39)
 
நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந்தா யில்லை மாமறை நூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே (40)
 
===3===
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது