பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,065:
ஆரோ நானென்று ஆய்வுறுகின் றவது நீயே (64)
 
==தாயார்==
தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை
===1-5===
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென் றபோதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி (1)
 
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் (2)
 
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் (3)
 
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன் (4)
 
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு (5)
===6-10===
அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளி தனை வைப்பேபோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம் வைத்து மூத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு (6)
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே (7)
 
வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை (8)
 
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய் (9)
 
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் (10)
==நினைவோட்டம்==
===1-3===
வெளிப்பட்டபின் பாடிய தலப்பாடல்கள்
 
மென்று விழுங்கி விடாய்க் கழிக்கநீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே –நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து (1)
 
கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் – தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு (2)
 
ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப்புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் – கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி (3)
===4-6===
வாவிஎல்லாம் தீர்த்த (ம்) மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கண நாதர் – பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத் தோர்
ஓதும் திருவொற்றியூர் (4)
 
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென் {று}
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடுவீர் (5)
 
எருவாய்க்கு இருவிரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்கோ கண்கலக்கப் பட்டாய்த் திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ (6)
===7-9===
எத்தனை ஊர் எத்தனை வீ {டு} எத்தனை தாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் கலையா ற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ (7)
 
அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா மெத்தன்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் ற்றி
இசிக்குதையா காரோணரே (8)
 
பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு (9)
===10-12===
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னம் ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற்கா (10)
 
மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணுமயன்
கையா றவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவையாறா (11)
 
காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு (12)
==அ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது