பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,232:
கட்டை இட்டுச் சுட்டு சுட்டுவிடக் கண்டு (10)
===11-15===
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே
அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே வன் கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு (11)
 
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு (12)
 
முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ
நாம்பூமி வாழ்ந்த நலம் (13)
 
எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண்தின்ப தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே
மேலைக் குடியிருப்போமே (14)
 
எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம் அறியீர் எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின்
சித்த நிராமயமா மே (15)
===16-19===
எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்டமுலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய் (16)
 
இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் (17)
 
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ வித்தகமாய்
காதிவிளை யாடி இரு கைவீசி வந்தாலும்
தாதி மனம் நீர்க்குடத்தே தான் (18)
 
மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என் செய்வாள் பின் (19)
===நெறி===
நாப்பிளக்கப் பொய் உரைத்துநவ நிதியம் தேடி நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே (20)
 
மத்தளை தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் கானா நிமிலனே நீ இன்றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே (21)
 
வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழி கொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ குயவன் தானும் கூழையோ
நிடுநின்றானும் வீணனோ நகரம் சூறை ஆனதே (22)
 
மண்ணும் உருகும் மரம்உருகும் மாயை உருகும் மால் உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேதவகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்ந்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே (23)
==அ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது