பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,459:
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா (50)
===51-60===
கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ (51)
 
அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ
திரு நயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ (52)
 
செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ (53)
 
முல்லை நிலவெறிக்கும் மூரல் ஒளி பாரேனோ
அல்லார் புகுவத்து அழகுதனைப் பாரேனோ (54)
 
மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ
சகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ (55)
 
கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
பொங்கு அரவைத் தான் சடாயில் பூண்ட விதம்பாரேனோ (56)
 
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ (57)
 
கொக்கிற்கு சூடி நின்று கொண்டாட்டம் பாரேனோ
அக்கினியை ஏந்தி நின்ற ஆனந்தம் பாரேனோ (58)
 
தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ
தாக்கும் முயலகன் மேல் தாண்டதவத்தைப் பாரேனோ (59)
 
வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ (60)
===61-70===
அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ (61)
 
சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ (62)
 
(கன்னி வன நாதா கன்னி வனநாதா )
 
கெட்ட நாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா
பட்ட நாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ (63)
 
நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ (64)
 
வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ (65)
 
வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ (66)
 
ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ
ஊனம் அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ (67)
 
என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளேடா
பின்னை எனக்கு நீயல்லாமல் பிறிதிலையே (68)
 
( கன்னி வனநாதா – கன்னி வனநாதா )
 
அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ (69)
 
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ (70)
===71-72===
ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ (71)
 
வாக்குமனா தீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள் குருவே நின் தாள் இணைக்கே யான் போற்றி (72)
 
==அ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது