பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,683:
===51===
வாசா மகோசரத்தை மருவி இடம் கொண்டாண்டி
ஆசூசம் இல்லாண்டி அறிவுக்கு அறிவாண்டி (51)
 
பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி (52)
 
தித்திக்க ஊறுமடி சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி (53)
 
உள்ளுணர்வாய் நின்றவர் தம் உணர்வுக்கு உணர்வாண்டி
எள்ளளவும் உள்ளத்தில் ஏறிக்குறையாண்டி (54)
 
தூரும் தலையும் இலான் தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி (55)
===56===
எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி (56)
 
வாக்கும் மனமும் வடிவம் இலா வான் பொருள் காண்
போக்கும் வரவும் இலான் பொருவரிய பூரணன் காண் (57)
 
காட்சிக்கு எளியான் காண் கண்டாலும் காணான்காண்
மாட்சி மனம் வைத்தார்க்கு மாணிக்கத்துள் ஒளி காண் (58)
 
வாழ்த்தி அவனை வழிபட்டால் மன்னுயிர்கள்
தோற்றம் அறியான் காண் சொல் இறந்த சோதியன்காண் (59)
 
ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான் (60)
===61===
அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண் (61)
 
எந்நாளும் இந்நாளும் இப்படியாய் அப்படியாய்ச்
சொன்னாலும் கேளான் காண் தோத்திரத்தில் கொள்ளான் காண் (62)
 
ஆத்தாளுக்கு ஆத்தாளாம் அப்பனுக்கு அப்பனுமாம்
கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல் காண் (63)
 
இப்போ புதிதோடி எத்தனை நாள் உள்ளதடி
அப்போதைக்கு அப்போது அருளறிவும் தந்தாண்டி (64)
 
பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி
குற்றம் அறுத்தாண்டி கூடிஇருந்தாண்டி (65)
===66===
வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும் (66)
 
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல்
தாழாமல் தாழ்ந்தேண்டி சற்றும் குறையாமல் (67)
 
பொய்யான வாழ்வு எனக்குப்போது மெனக் காணேண்டி
மெய்யான வாழ்வு எனக்கு வெறும் பாழாய் விட்டதடி )68)
 
கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி
என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி (69)
 
சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள் (70)
===71===
கண்மாயம் இட்டாண்டி கருத்தும் இழந்தேண்டி
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி (71)
 
என்ன சொல்லப் போறேன் நான் இந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு காய்த்ததடி கண்ணார (72)
 
ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி
சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி (73)
 
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்றறிந்து
அந்தசுகா தீதத்து அரும்கடலில் மூழ்கினண்டி (74)
 
இரும்பின் உறைநீர் போல எனைவிழுங்கிக் கொண்டாண்டி
அரும்பில் உறைவாசனை போல் அன்றே இருந்தாண்டி (75)
===76===
அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி (76)
 
கடல்நீரும் ஆறும்போல் கலந்துகரை காணேண்டி
உடலும் உயிரும் போல் உள் கலந்து நின்றாண்டி (77)
 
பொன்னும் உரை மாற்றும்போல் பொருவு அரிய பூரணன் காண்
மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள் ஒளிபோல் (78)
 
கங்குகரை இல்லாண்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும் அளவில்லாண்டி ஏகமாய் நின்றாண்டி (79)
 
தீவகம் போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்
பாவகம் ஒன்று இல்லாண்டி பார்த்த இடம் எல்லாம் பரன் காண் (80)
===81===
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது