பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,833:
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி (100)
===101===
அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான் சற்றுப் பேசாப் பிரமமடி (101)
 
கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி (102)
 
வேதப் புரவியடி விரைந்தோடியும் அறியார்
காதற்ற ஞானமடி காண்பார் கருத்துடையோன் (103)
 
பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி (104)
 
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி (105)
===106===
சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டி எனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி (106)
 
தான் என்னைப் பார்த்தாண்டி தன்னைத் தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி நவில இடம் இல்லையடி (107)
 
இன்றிலிருந்துநாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி (108)
 
பார்க்கில் எளிது அலவோ பற்றற்ற பற்று அலவோ
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி (109)
 
இத்தனை காலமடி இறந்து பிறந்ததெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில் உறை நீரானேன் (110)
===111===
எக்காலம் பட்டதடி இறந்து பிறந்த தெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில் (111)
 
காலம் கழிந்ததடி கர்மம் எல்லாம் போச்சுதடி
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி (112)
 
முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண் எனை விழுங்கிக் கொண்டான் காண் (113)
 
பாலின்கண் நெய் இருந்தாற்போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறிவிழுங்கிக் கொண்டாண்டி (114)
 
செத்தபடம் ஆனேண்டி தீ இரும்பில் நீரானேன்
ஒத்தவிட நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன் (115)
===116===
ஒப்பும் உவமையும் அற்ற ஒரு அரிதாய பொருள்
இப்புவி நில்குருவே என்னவந்தோன் தாள் வாழி (116)
 
ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுதருள் வாரீ (117)
 
==அ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது