பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,928:
வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே (14)
 
=நெஞ்சோடு புலம்பல் =
=அ=
===1===
மண் காட்டிப் பொன் காட்டி மாய இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுமின்ற தேசிகனைப் போற்றாமல்
கண் காட்டும் வேசியர் தம்கண் வலையில் சிக்கி மிக
அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே (1)
 
புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணி யோனாணி நீங்காமல்
இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும்
முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே (2)
 
முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு என்று ஈயாமல்
துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே (3)
 
அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே (4)
 
முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே (5)
===6===
மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே (6)
 
கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே (7)
 
முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கே வருமோ
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன் போல் காட்சியுற்றாய் நெஞ்சமே (8)
 
பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்
துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணிவளையும் காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே (9)
 
மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப்
போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே (10)
===11===
அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்
வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வாராமல்
நெஞ்சரணத்தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே (11)
 
அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெரு வாழ்வை நம்பிச்
சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே (12)
 
உற்றார் ஆர் பெற்றார் ஆர் உடன் பிறப்பு ஆர் பிள்ளைகள் ஆர்
மற்றார் இருந்தால் என் மாளும் போது உதவுவேரா
கற்றா இழந்த களம் கன்றது போலவே உருகிச்
சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே (13)
 
வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப்பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே (14)
 
சந்தனமும் குங்குமமும் சாந்தும் பரிமளமும்
விந்தைகளாகப் பீசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே (15)
===16===
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து
பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே (16)
 
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே (17)
 
சின்னஞ்சிறு நுதலாள் செய்த பல வினையால்
முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி
வன்னம் தள தளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே (18)
 
ஓட்டைத் துருத்தியை உடையும் புழுக் கூட்டை
ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப் போற்றியே
வீட்டைத் திறந்து வெளியை ஒளி யால் அழைத்துக்
காட்டும் பொருள் இதென்று கருதிலையே நெஞ்சமே (19)
 
ஊன் பொதிந்த காயம் உளைந்த புழுக் கூட்டைத்
தான் சுமந்த தல்லால் நீ சற்குருவைப் போற்றாமல்
கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு
மீன் பரந்தால் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே (20)
===21===
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது