பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,030:
மீன் பரந்தால் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே (20)
===21===
உடக்கை ஒருத்தி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொரும் அங்குவர மாட்டாதே (21)
 
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்ததான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே (22)
 
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முலை மாதர்வலைக் குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே (23)
 
அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே (24)
 
ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே (25)
===26===
ஏணிப் பழுஆம் இருளை அறுத் தாள முற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்
ஆணி அற்ற மாமரம்போல் ஆகினனே நெஞ்சமே (26)
 
கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்ட மெல்லாம்
காத்தப் படியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி
ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே (27)
 
நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலை தொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்
வலைபட்டு உழலுகின்றமான் போல் பரதவித்துத்
தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே (28)
 
முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்
இடைக்கும் நடைக்கும் இதம்கொண்ட வார்த்தைசொல்லி
அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே நாய் அனையேன்
விடக்கை இழந்த மிருகமது ஆனேனே (29)
 
பூவாணர் போற்றும் புகழ்மதுரைச் சொக்கரது
சீர் பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் புலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே (30)
===31===
பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்
தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாகி
வித்திட்டாய் நெஞ்சே விடவும் அறியாயே (31)
 
அஞ்சும் உருவாகி ஐம்மூன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே (32)
 
ஊனம் உடனே அடையும் புழுக்கூட்டை
மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருதந் தேசம் விட்டுப்
போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே (33)
 
ஊறை இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை
வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்
றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே (34)
 
அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியதுபோல் ஆனேனே (35)
===36===
தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே (36)
 
விலையாகிப் பாண்டுக்கு வீறடிமைப் பட்டதுபின்
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே (37)
=அ=
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது