பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,267:
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே (50)
===51===
வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே (51)
 
பொய்யாய்ப் புவியாய் புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே (52)
 
பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே (53)
 
முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே (54)
 
ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே (55)
===56===
வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே (56)
 
ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எலாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே (57)
 
மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே (58)
 
சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே (59)
 
பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற அளவறி யேன் பூரணமே (60)
===61===
வானில் கதிர்மதியாய் வளர்ந்து பின் ஒன்று ஆனது போல்
ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப் பறியேன் பூரணமே (61)
 
பொய்யும் புலையும் மிகப் பொருந்தி வீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே (62)
 
நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னைப் பதம் அறியேன் பூரணமே (63)
 
கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே (64)
 
வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எலாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே (65)
===66===
வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே (66)
 
தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே (67)
 
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே (68)
 
நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே (69)
 
மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே (70)
===71===
உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே (71)
 
சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னும் ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே (72)
 
முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே (73)
 
என்னதான் கற்றால் என் எப்பொருளும் பெற்றால் என்
உன்னை அறியாதார் உய்வரோ பூரணமே (74)
 
கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே (75)
===76===
வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே (76)
 
ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குண்டுவாய் இருந்த
சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே (77)
 
மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சென்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே (78)
 
பரம் என்பார் பானு என்பார் பாழ்வெளியாய் நின்ற
வரம் என்பார் உன்றன் வழி அறியார் பூரணமே (79)
 
எத்தனை பேரோ எடுத்தெடுத்துத்தான் உரைத்தார்
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே (80)
===81===
நகாரமகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே (81)
 
மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே (82)
 
உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே (83)
 
வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே (84)
 
சந்திரனை மேகமது தான் மறைத்த வாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே (85)
===86===
செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே (86)
 
நீர் மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே (87)
 
நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே (88)
 
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (89)
 
மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே (90)
===91===
பூசையுடன் புவனபோகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே (91)
 
படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே (92)
 
மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே (93)
 
அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே (94)
 
நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன் பூரணமே (95)
===96===
பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே (96)
 
சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிபே தங்கள் என்றும்
பாந்தம் என்றும் புத்தியென்றும் படைத்தனையே பூரணமே (97)
 
பாசம் உடலாய்ப் பசு அதுவும்தான் உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே (98)
 
ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே (99)
 
நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே (100)
===101===
முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே (101)
 
பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே (102)
 
=அ=
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது