பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,422:
பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே (102)
 
=நெஞ்சோடு மகிழ்தல் =
===1===
அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய் நெஞ்சமே (1)
 
அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய் நெஞ்சமே (2)
 
அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே நெஞ்சமே (3)
 
பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே நெஞ்சமே (4)
 
களவிறந்து கொலையிறந்து காண்பனவும் காட்சியும் போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே (5)
===6===
பேச்சிறந்து சுட்டிறந்து பின்னிறந்து முன்னிறந்து
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய் நெஞ்சமே (6)
 
விண்ணிறந்து மண்ணிறந்து வெளியிறந்து ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய் நெஞ்சமே (7)
 
பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உன் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே (8)
 
ஊரிறந்து பேரிறந்து ஒளியிறந்து வெளியிறந்து
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே (9)
 
ஆண் பெண் அலியென்று அழைக்க அரிதாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே (10)
===11===
ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே (11)
 
ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே (12)
 
விருப்பு வெறுப்பு இல்லா வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே (13)
 
ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே (14)
 
உடனாகவே இருந்து உணர அரியானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே நெஞ்சமே (15)
===16===
நெடியகத்தைப் போக்கி நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே நெஞ்சமே (16)
 
மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில்
பாலூறும் மென்சிவைபோல் பற்றினையே நெஞ்சமே (17)
 
நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல்
ஊரோடுபேர் இல்லானோடு ஒன்றினையே நெஞ்சமே (18)
 
இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடியே இருக்கச்
செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே நெஞ்சமே (19)
 
மேலாம் பதங்கள் எல்லாம் விட்டு விட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே நெஞ்சமே (20)
===21===
கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய் நெஞ்சமே (21)
 
கற்றவனாய்க் கேட்டவனாய்க் காணானாய்க் காண்பவனாய்
உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே (22)
 
நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய்
சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே (23)
 
விட்டிடமும் தொட்டிடமும் விண்ணிடமும் மண்ணிடமும்
கட்டும் ஒரு தன்மை எனக் கண்ணுற்றாய் நெஞ்சமே (24)
 
எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே நெஞ்சமே (25)
===26===
வாக்கிறந்து நின்ற – மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலை செய்தாய் நெஞ்சமே (26)
 
எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து
சித்தாய் சித்தினிடம் சேர்ந்தனையே நெஞ்சமே (27)
 
தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்த
வாழாதே வாழ மருவினையே நெஞ்சமே (28)
 
உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே (29)
 
வாதனை போய் நிட்டையும் போய் மாமௌன ராச்சியம் போய்
பேதம் அற நின்ற இடம் பெற்றனையே நெஞ்சமே (30)
===31===
இரதம் பிரிந்து கலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே நெஞ்சமே (31)
 
சோதியான் சூழ்பனி நீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீ பெற்றாய் நெஞ்சமே (32)
 
=அ=
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது