பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,521:
நீதிகுரு வின்திருத்தாள் நீ பெற்றாய் நெஞ்சமே (32)
 
=உடல் கூற்று வண்ணம் =
=அ=
===இசை===
தனதன தான தனதன தான
:தந்ததனந்தன தந்ததனந்தன
தனன தனந்த தனன தனந்த
:தானன தானன தானன தந்த –
தந்ததனதான தனதானனா
===1===
ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து – (1)
 
பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்து திரண்டு பதும அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய்வாய் செவி கால் கைகள் என்ற – (2)
 
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும்நாளும் அறிந்து – (3)
 
மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்தி
உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓரறிவீரறி வாகி வளர்ந்து – (4)
 
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாஇருபோவென நாமம் விளம்ப – (5)
===6===
உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரோ டோடி நடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே – (6)
 
உயர் தருஞான குரு உபதேசம் முத்தமிழின்கலை
யும் கரைகண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து (7)
 
மயிர்முடிகோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
கொண்டை புனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க – (8)
 
மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழி கொண்டு சுழிய எறிந்து
மாமல் போல் அவர் போவது கண்டு – (9)
 
மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி – (10)
===11===
ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம் இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து – (11)
 
வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல் விழுந்து இரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிராத குரோதம் அடைந்து –
செங்கையினில் ஓர் தடியும் ஆகிழே – (12)
 
வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் பொழிந்து – (13)
 
துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு (14)
 
கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து – (15)
===16===
தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதென நொந்து – (16)
 
மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியெனதொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற – (17)
 
கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று –
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே – (18)
 
வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து – (19)
 
வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து (20)
===21===
பழையவர் காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று – (21)
 
பலரையும் ஏவி முதியவர் தராமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை (22)
 
வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து – (23)
 
விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை –
நம்பும் அடியேனை இனி ஆளுமே (24)
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது