பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி →‎top: பக்க மேம்பாடு using AWB
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப்பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப்பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.


இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனீக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்கு கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சி சாஸ்திரி வெங்கட்ராமய்யர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனீக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித்தேனீதான்் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித் தேனீகள் ஓரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளை செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.
இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனீக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்கு கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சி சாஸ்திரி வெங்கட்ராமய்யர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனீக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித்தேனீதான் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித் தேனீகள் ஓரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளை செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.


ஒற்றை அடை மட்டுமே கட்டும் சாமானியத் தேனீ ஒருவகை. இது தேனடைகளை சொந்த மெழுகால் கட்டாமல் மண்ணையும், மரப்பிசின்களையும் சேர்த்து கட்டுமாம். இந்திரா காந்தியுடன் ஆரம்பத்தில் அரசியல் விளைவுகளை புறந்தள்ளி கூட்டணி வைத்த கலைஞர் எனக்கு சாமானீயத் தேனீயாகத் தோன்றினார். ஒரு காலத்தில் மலைத்தேனீயாக இருந்து பின்னர் சமதளத்திற்கு வந்து பயந்தாங் கொள்ளியாய் போன டாமர் தேனீ வகை ஒன்றையும், பூச்சி சாஸ்திரி குறிப்பிடுவார். இது எனக்கு வீரமணி அவர்களின் திராவிடக் கழகமாகப் பட்டது. இரண்டு ராணித் தேனீக்களை நினைத்ததும் எனக்கு ஜெயலலிதா, சசிகலா நினைவு வந்ததை சொல்ல வேண்டியது இல்லை.
ஒற்றை அடை மட்டுமே கட்டும் சாமானியத் தேனீ ஒருவகை. இது தேனடைகளை சொந்த மெழுகால் கட்டாமல் மண்ணையும், மரப்பிசின்களையும் சேர்த்து கட்டுமாம். இந்திரா காந்தியுடன் ஆரம்பத்தில் அரசியல் விளைவுகளை புறந்தள்ளி கூட்டணி வைத்த கலைஞர் எனக்கு சாமானீயத் தேனீயாகத் தோன்றினார். ஒரு காலத்தில் மலைத்தேனீயாக இருந்து பின்னர் சமதளத்திற்கு வந்து பயந்தாங் கொள்ளியாய் போன டாமர் தேனீ வகை ஒன்றையும், பூச்சி சாஸ்திரி குறிப்பிடுவார். இது எனக்கு வீரமணி அவர்களின் திராவிடக் கழகமாகப் பட்டது. இரண்டு ராணித் தேனீக்களை நினைத்ததும் எனக்கு ஜெயலலிதா, சசிகலா நினைவு வந்ததை சொல்ல வேண்டியது இல்லை.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/123" இலிருந்து மீள்விக்கப்பட்டது