திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 60:
 
===திருக்குறள்: 33 (ஒல்லும்)===
 
 
 
:ஒல்லும் வகையா னறவினை யோவாதே
:செல்லும்வா யெல்லாஞ் செயல்"
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = தத்தமக்கியலுந்திறத்தான்;
:அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
:இயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும் துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவுஞ் செய்தல்.
:ஓவாமை இடைவிடாமை.
:எய்தும் இடமாவன மனம் வாக்குக் காயம் என்பன.
:அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.
:இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.