திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 81:
:அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.
:இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 34 (மனத்துக்கண்)===
 
 
:மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
:னாகுல நீர பிற."
 
 
:பரிமேலழகர் உரை
 
 
:(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;
:அனைத்து அறன் = அவ்வளவே அறமாவது;
:பிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
 
:குற்றம் தீயன சிந்தித்தல்.
:பிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீர என்றார்.
:மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.