திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 104:
:பிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீர என்றார்.
:மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 35 (அழுக்காறவா)===
 
 
:'''"அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு'''
:'''மிழுக்கா வியன்ற தறம்.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;
:அவா = புலன்கண்மேற் செல்கின்ற அவாவும்;
:வெகுளி = அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;
:இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;
:நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
 
:இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
:இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 36 (அன்றறிவா)===
 
 
:'''அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது'''
:'''பொன்றுங்காற் பொன்றாத் துணை.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
:(இதன் பொருள்) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;
:அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம்.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
 
மற்று என்பது அசைநிலை.
:பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
:இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.