திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 198:
:பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
:இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.
 
 
===திருக்குறள்: 39 (அறத்தான்)===
 
 
:'''"அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்'''
:'''"புறத்த புகழு மில.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;
:மற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினுந் துன்பத்தினிடத்த;
:புகழும் இல = அதுவேயுமன்றிப் புகழும் உடையனவல்ல.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
 
:ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; தூங்கு கையா னோங்கு நடைய"(புறநானூறு, 22) என்புழிப்போல.
:இனபம் காமநுகர்ச்சி; அஃதாமாறு காமத்துப்பாலின் முதற்கட் சொல்லுதும்.
:இன்பத்திற் புறம் எனவே துன்பமாயிற்று.
:பாவத்தான் வரும் பிறனில்விழைவு முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றுமாயினும் பின் துன்பமாய் விளைதலின் புறத்த என்றார்.
:அறத்தோடு வாராதன புகழுமில எனவே, வருவது புகழுடைத்தென்பது பெற்றாம்.
:இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 40 (செயற்பால)===
 
 
:'''"செயற்பால தோரு மறனே யொருவற்
:'''குயற்பால தோரும் பழி.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;
:உயற்பாலது பழியே = ஒழிதற்பான்மையது தீவினையே.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
 
 
:ஒரும் என்பன இரண்டும் அசைநிலை.
:தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
:பழிக்கப்படுவதனைப் பழி யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.
 
 
:'''தெய்வப்புலமைத் திருவள்ளுவர் செய்த அறன்வலியுறுத்தல் அதிகாரமும் அதற்குப்பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.'''
 
 
==திருக்குறள் பாயிரவியல் முற்றும்==