;விளக்கம்: பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான்{{sup|★1}} வருந்துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்<sup>2</sup> இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.
{{smaller|★1. தன்னைப்பற்றி வருவன-ஆத்யாத்மிகம் எனப்படும்; பிற உயிர்களைப்பற்றி வருவன- ஆதிபௌதிகம் எனப்படும்; தெய்வத்தைப் பற்றி வருவன - ஆதிதைவிகம் எனப்படும்.}}