அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. காலத்தின் மீது சத்தியமாக.
  2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
  3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/காலம்.&oldid=19638" இலிருந்து மீள்விக்கப்பட்டது