குர்ஆன்/ஜுவாலை

111ஸூரத்துல் லஹப் (சுடர்) வசனங்கள்:5 மக்காவில் அருளப்பட்டது
இல அரபு தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞111:1. تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
۞111:2. مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ *அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை..
۞111:3. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ *விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
۞111:4. وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ *விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
۞111:5. فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ *அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/ஜுவாலை&oldid=22412" இலிருந்து மீள்விக்கப்பட்டது