பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 95


இது, செவிலி கூற்றினைத் தோழி கொண்டு கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

(தலைவியானவள் திடுமெனப் பாலும் வெறுத்து ஒதுக்கிய நிலைகண்டு, அவளுடைய செவிலித்தாய் மிகவும் உள்ளம் கலங்கினாள். தோழியினிடம் அதுபற்றிக் கேட்க, அவள், அவள் உள்ளங் கவர்ந்து சென்ற அக் காதலனைப் பற்றிக் கூறி, அறத்தொடு நிற்கின்றாள்.)

'அன்னாய்! வாழி! வேண்டுஅன்னை! நின்மகள்
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள் எனவினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,

மலியூஞ் சாரல், என்தோழி மாரோடு
5


ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
‘புலிபுலி! என்னும் பூசல் தோன்ற -
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,

பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
10


குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்றுஅம் மாதிறம் படர்?'என
வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,

எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி
15


நாணி நின்றென மாகப், பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய்குதல்
மைஈர் ஒதி மடவீர்!நும் வாய்ப்
பொய்யும் உளவோ?’ என்றனன் பையெனப்

பரிமுடுகு தவிர்த்த தோன், எதிர்மறுத்து,
20


நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம் நோக்கி, மற்றுஇவன்

மகனே, தோழி! என்றனள்.
25


அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.

அன்னையே! நீ வாழ்வாயாக! நின் மகள் துன்பம் கொண்டனள், பாலும் உண்ணாதாளாயினள், மிகவும் பசந்தனள்; என, என்பால் வினவுகின்றனை. யான் கூறுவதனை விருப்பமுடன் கேட்பாயாக