பக்கம்:அகமும் புறமும்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன் • 333

என்ற குறள் ஆய்தற்குரியது. நுண்மதி என்றும், நூலறிவு என்றும், இரண்டாகப் பகுத்து இயங்கு பேசப்படுவதைக் காணலாம். நூலறிவில்லாவிடத்தும் நுண்ணறிவு இருத்தலையும், பலரிடம் நுண்ணறிவில்லாவிடத்தும் நூலறிவு இருத்தலையும் காணலாம். எனினும், இவை இரண்டும் சேர்ந்தமைந்தாலொழிய, முழுப்பயனை விளைப்பதில்லை. எத்துணைச் சிறந்த நுண்ணறிவாயினும், நூலறிவு இல்வழி வகைதொகையற்றுச் சென்றுவிடும். நுண்ணறிவில் வழி, நூலறிவு செக்கிழுக்கும் மாடு போலச் சென்ற வழியே செல்லுமே தவிர புதியன காண முற்படாது.

புதுமையும் பழமையும்

ஒரு காலத்து ஓரிடத்து அனைவரும் நம்பின ஒன்றை நூல் வழக்குச் சிறந்ததெனப் பேசும். ஆனால், காலமும் இடனும் மாறியவிடத்து இந்நிலை முறை மாறிவிடும். அதனால், முன்னர் எழுதப்பெற்ற நூலில் இப்புதுவழக்கு இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, நுண்ணறிவுடன் உலகியலறிவும் இல்லாதான் இம்மாற்றங்கொண்டு மருட்சி அடைய நேரிடும். கால மாறுபட்டான் ஏற்படும் வழக்கு மாறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நூலறிவு, வளர்ச்சியை மறுக்கும் அறிவாகும். ஆதலால், வள்ளுவர் இவ்வளர்ச்சியைக் காணுமிடத்து உடன் அறிந்துகொள்ளும் நுண்ணுணர்வை முதலிற் கூறினார். ‘அவ்வாறாயின், மதிநுட்பம் மட்டும் போதாதா? நூலறிவு எற்றுக்கு? என்ற வினாத் தோன்றுமன்றே? வளர்ச்சி என்பது தனித்துத் தோன்றுவதொன்றன்று. பழமையிலிருந்துதானே புதுமை தோன்றுதல்கூடும்? விதையிலிருந்துதானே மரம் தோன்றல் கூடும்? மரத்தில் விதையின் தன்மை காணப்படுமாறு போலப் புதுமையிலும் பழமையின் இயல்பு காணப்படும். பழமையை அறவே ஒழித்த புதுமை வேண்டுவது, விதை