பக்கம்:அங்கும் இங்கும்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59



“இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.

கருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.

இதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.

பின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.

அவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா ! நீ வாழ்க!” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேநீர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.

பெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர்