பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


III. பதினான்கு முக்கிய சாஸனங்கள்.

இவை அசோகனின் 13. 14-வது ஆண்டுகளில் பிரசுரஞ் செய்யப்பட்டவை. இந்தப் பதினான்கு சாஸனங்களுக்கும் கருத்தில் ஒத்திருக்கின்றதும் பாஷையில் ஏறக்குறைய நெருங்கிய சம்பந்தமுள்ளதுமான ஆறு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வாறு பிரதிகளைத் தவிர வேறு பல முற்காலங்களில் இருந்திருக்கலாம். பம்பாய்க்கு சமீபமாயுள்ள ஸொப்பாரா என்ற பழைய துறைமுகப் பட்டணத்தில் ஒரு பிரதி இருந்ததற்கு நமக்கு நல்ல லக்ஷியம் மட்டும் கிடைத்திருக்கிறது. இப்போது அங்கே எட்டாவது சாஸனம் எழுதப்பட்டுள்ள பாறையின் துண்டிருக்கின்றது.

பதினான்கு சாஸனங்களுக்குப் பிரதிகள் உள்ள இடங்களாவன:-

1. இந்தியாவின் வடமேற்குக் கோடியில் ஸிந்துநதி காபூல் நதியோடு சங்கமமாகும் பிரதேசத்தின் அருகில் ஷாபாஸ்கர்ஹி. இங்குள்ள பிரதி நல்ல ஸ்திதியில் இருக்கிறது. சமரஸபாவத்தைப்பற்றிய . 12.ம் சாஸனம் பாறையின் மற்றொரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.எல்லா சாஸனங்களும் ஒருமித்து அரசனின் 14.வது பட்டாபிஷேக வருஷத்தில் இங்கு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2. பஞ்சாபில் ஜிலம் நதிக்கரையருகில் ஹஸாரர் ஜில்லாவிலுள்ள மான்ஸரா. இவ்விடத்திலும் ஷாபாஸ் கர்ஹியிலும் உள்ள சாஸனங்கள் கரோஷ்டி லிபியில் எழுதப்பட்டவை. அசோகனுடைய மற்ற லிகிதங்கள் எல்லாம் ப்ராம்மி லிபியில் எழுதப்பட்டவை,

3. இமயமலைச் சாரலில் முஸ்ஸோரி என்ற சுகவாஸ ஸ்தலத்தின் அருகிலுள்ள கால்ஸீ. இங்குள்ள பிரதி சுமாராய் நல்ல ஸ்திதியில் இருக்கிறது. ஒரு யானையின் படம் லிகிதங்களுக்குமுன் வரையப்பட்டிருக்கிறது.