பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சாஸனங்கள்

3. அனுஸம்யானம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நான் பட்டம் சூடிய பன்னிரண்டு வருஷங்களுக்குப்பின் இந்த ஆணையைப் பிறப்பித்தேன். என்னுடைய ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும் யுக்தரும்1 ரஜூகரும் பிராதேசிகரும் ஐந்துவருஷங்களுக்கு ஒரு முறை அனுஸம்யானம்2 செய்யவேண்டும் ; எதற்காகவென்றால், தர்மத்தைப் போதிப்பதற்கும் தந்தம் வேலையைச் சரிவர முடிப்பதற்குமே. தாய் தந்தையரைக் கவனிப்பது மேன்மை; சினேகிதர், அறிமுகமானவர், உறவினர், பிராமணர், சமணர் இவர்களுக்கு ஈதல் மேன்மை ; பிராணிகளைக் கொல்லாமை, செலவில் சிக்கனம், செல்வத்தைக் கருதாமை மேன்மை.

பரிஷத்து சபைகள்3 கணனங்களைச் சார்ந்த யுக்தர்களை இக்கட்டளையை யனுசரித்து நடக்கும்படிச் செய்யவேண்டும்.4

மொத்தம் 5 வாக்கியங்கள்.

1. முன் 54-ம் பக்கம் பார்க்க. கௌடல்யம் அர்த்த சாஸ்திரத்திலும் யுக்தரின் வேலையைப் பற்றி விரிவாகக் கூறியிருக்கிறது.

2. அனுஸம்யானம் என்ற சொல்லின்கருத்தைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டென்பதை, முன் 55-ம் பக்கம் காண்க.

3. ஐந்து வகை பௌத்த பிக்ஷுக்கள் சேர்ந்த சமூஹத்துக்குப் பரிஷத்துக்கள் என்று பெயர்.

4. பரிஸாபி யுதே ஆஞபயிஸ்தி மணனாயம் ஹெது தொவ வ்யஞ்ஜனதோவ. வ்யஞ்னம் என்றால் அசோகனுடைய ஆணை, வாக்கியத்தின் கருத்து நன்றாக விளங்கவில்லை. கணனா என்றால் வரவு செலவு கணக்கு அதிகாரிகளென்று ஸ்ரீ. S. R. பந்தர்க்கர் கூறுகிறார். அவதாரிகை 56-ம். பக்கம் பார்க்கவும்.