பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் சாஸனம்

109

இந்தச் சாஸனத்தில் வடநாட்டுப் பிரதிகளுக்கும் மற்றப் பிரதிகளுக்கும் முதல் ஒன்பது வாக்கியங்கள் பொது, (A) என்ற பாராவில் உள்ள வாக்கியங்கள் ஆறும் வடஇந்தியப் பிரதிகளில் உள்ளவை. (B) என்ற பாராவின் வாக்கியங்கள் மற்ற மூன்று பிரதிகளிலும் உள்ளவை.

I. மங்களமுண்டாகும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகள், ‘மங்களம்’ என்றே மூலத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன.