பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சாஸனங்கள்

14 வாக்கியங்கள், மூன்றாவது வாக்கியத்தில் இருபத்திரண்டு வகைப் பிராணிகள் கூறப்பட்டிருக்கின்றன, இவற்றில் சில பிராணிகளுடைய தமிழப்பெயர் நிச்சயமாய்த் தெரியாமையால் மூலத்திலுள்ள பெயரையும் எழுதியிருக்கிறோம்.

சௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலும் (அதிக. II. அத். 26) பிராணி இம்சையைப்பற்றி இன்னும் விரிந்த சட்டங்கள் காணப்படுகின்றன.

(1) நோ நீலக்ஹிதவியே. வடமொழி, ந நிற்லக்ஷிதவ்யம். லக்ஷியமில்லாமற் செய்தல் கூடாது.

(2) சாதுர்மாத தினம் என்பது சாதுர்மாதத்தின் முதல் நாள் என்று முன் 127ம் பக்கத்தில் கூறியுள்ளோம். சாதுர்மாத பக்ஷம் என்பது முதற் பதினைந்து நாட்களென்று தோன்றுகிறது.