பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


I. உப சாஸனங்கள்

இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள அசோக சாஸனங்களில் உபசாஸனங்களே ஆதியானவையென்று ஊகிக்கப்படுகின்றன. இவை அரசன் முடி சூடிய பதின்மூன்றாம் வருஷத்தில் பிரசுரமானவை. இந்தச் சாஸனங்கள் இரண்டு. முதல் லிகிதத்துக்கு மொத்தம் ஏழு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இரண்டாவது லிகிதம் மைசூர் ஸம்ஸ்தானத்தினுள் மூன்று சமீபமான ஊர்களில் காணப்படுகிறது. முதல் உபசாஸனத்தில் பிரதிக்குப் பிரதி கொஞ்சம் வித்தியாசங்கள் காணப்படுகிறது. முதலாவது விகிதம் காணப்படும் இடங்களாவன,

1. ரூபநாத் இது மத்திய மாகாணத்தில் ஜபல்பூரின்

அருகிலுள்ள ஊர். லிகிதம் சுமாராக வாசிக்கக்
கூடிய நிலைமையில் இருக்கிறது.

2. ஸஹஸ்ராம். இது பிஹார் மாகாணத்தின் தெற்கேயுள்ள

குன்று லிகிதம் இதன் உச்சியிலுள்ள பாறையில் இருக்கிறது. :லிகிதம் சிதைவுபட்டுள்ளது.

3. பெய்ராத். இது ராஜபுதனத்தில் ஜெயப்பூர் ஸம்ஸ்தானத்தில்

உள்ள ஊர். பாப்ரூ என்ற ஊரும் இதற்குச்
சமீபமுள்ளது; லிகிதம் சிதைவுபட்டுள்ளது.

4. ஸித்தாபுரம். மைசூரின் வடக்கு சித்தல் துர்க்கம்

ஜில்லாவில் உள்ள ஊர்.

5. பிரம்மகிரி. ௸ ஊருக்கு ஸமீபமுள்ளது. இங்குள்ள

லிகிதமும் ரூபநாத்திலுள்ள லிகிதமுமே வாசிக்கக் கூடிய :நிலைமையிலுள்ளன.

6. ஜடிங்கராமேசுவரம். . இதுவும் ௸ ஊருக்குச் சமீபமுள்ளது.

7. மாஸ்கி. ஹைதரபாத் ராஜ்யத்தில் ரெய்ச்சூர் ஜில்லாவில்

உள்ளது. இங்குள்ள லிகிதம் ஏழு வருஷங்