பக்கம்:அணியும் மணியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்பது இக் கருத்தை அறிவிக்கும் பாடலாகும்.

இவற்றைப் போன்ற பல நன்மையோடு கூடிய உண்மைகள் புறநானூற்றில் சிதறிய முத்துகளைப் போல ஆங்காங்குக் கிடக்கின்றன. வாழ்வின் அனுபவத்தோடு அமைந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக நின்று, சிறந்த கருத்தமைந்த இத்தகைய மொழிகளைப் பொருள்மொழிகள் என ஆன்றோர் வழங்கி வந்தனர். உண்மைப் பொருள்களைக் கூறும் இப்பொருள் மொழிகள் பொன்மொழிகளாக விளங்கி இலக்கியவளத்தை மிகுவித்துக் கற்போர்க்கு ஊன்றுகோல் போல் நின்று. வாழ்க்கையில் வழுக்கிவிழாமல் நன்மை செய்கின்றன என்று கூறலாம்.