121
அமைந்திருந்தாலும் அப் பாடல் மக்களை எழுப்புவதாகவே அமைந்துள்ளது.
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே
என்று பள்ளி எழுப்புகின்றார்.
மக்கள் எழுச்சியில் ஒரு தனி எழிலைக் காண்கின்றார். அதை பாரத அன்னையின் எழுச்சியாகக் கூறி அந்த எழுச்சியில் எழிலை எப்பொழுது காண்போம் என ஏங்குகின்றார்.
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறியாயோ!
என்று கேட்டு, அவ்வெழுச்சியில் ஒரு தனி வேட்கையை எழுப்பிவிடுகிறார்.
நாடு வாழ, மொழியும் வாழவேண்டும் என்ற நல்லுணர்வு பாரதியின் பாடலில் ஆழப் பதிந்து கிடக்கிறது. அதனால்தான் நாட்டின் உணர்வு பெருகப் பாடிய அப் பாவலர் மொழியின் பெருமையையும் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்குங் காணோம்
என்று தமிழின் இனிமையைத் தம் இனிய பாடலில் இசைத்துக் காட்டுகின்றார்.
ஒரு மொழியின் பெருமையை அந்த மொழியில் தோன்றும் உயர்ந்த கவிகளின் சிறப்பாலேயே உலகம் மதிக்க முடிகிறது என்பதை நன்குணர்ந்த பாரதியார்,
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்
இளங்கோ வைப்போல்