132
வினையெச்சங்களுக்கு மாறாகத் தொழிற் பெயர்களை அமைத்தல் அவர் தனி இயல்பு.
மகிழ வேண்டும் என்று கூறுவதை விட்டு; மகிழ்தல் வேண்டும் என்பர். நாடவேண்டும் என்று கூறுவதைவிட்டு நாடல் வேண்டும் என்றுதான் கூறுவர்.
‘சேர்க்கை வாழ்க்கை நடாத்துவோரும் ஆகின்றனர்’. - நெடில் வடிவங்களில் இனிமை உண்டாக்குகிறார்.
“அஃறிணை உயிர்கள் இயற்கை வழி வாழ்வை நடாத்துகின்றன.” இங்கே நடத்துதற்கு என்பதற்கு மாறாக நடாத்துதல் என்ற நெடிய வடிவத்தைப் பயன்படுத்துகின்றார். ‘நிழல்’ என்பதற்கு மாறாக நீழல் என்பதைப் பயன்படுத்துகின்றார்.
ஓசை இனிமைக்கு உயிரளபெடை வடிவங்களையும் அவர் பயன்படுத்துவதைக் காண்கின்றோம். ‘என்னை’ என்கின்ற வினாச்சொல்லை மிகுதியாக வழங்குதலைக் காண்கின்றோம்.
‘என்ன’ என்பதைப் பன்மைக்கும், ‘என்னை’ என்பதை ஒருமைக்கும் அவர் பயன்படுத்துவதை நாம் காண்கின்றோம். வியப்பை உணர்த்தும் வகையில் ‘என்னே’ ‘என்னே’ என்ற தொடர்களை வழங்குகின்றார்.
“சோழ நாட்டின் வளம் என்னே! என்னே!”
வினா என்பதோடு கடா என்ற சொல்லை வழங்குகிறார். ‘எற்றுக்கு’ என்பதும் அவர் தனி வழக்காகும்.
“காணமுயல்வது எற்றுக்கு
என்னும் கடா எழுகிறது” -
இதற்கு எடுத்துக்காட்டாகும்.