பக்கம்:அணியும் மணியும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது
அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்

—காதை 21, 71-79

என்று கூறும் உரையில், தன் காதலன் இறந்தும், தன் அறிவை இழக்காமல் அருளுள்ளம் படைத்து, உலகத்து உயிர்களுள் ஒன்றாக அவன் வாழ்வையும் மதிக்கும் சிறப்புள்ளம் பெற்றுத் துறவில் மேம்படுதலைக் காண்கிறோம்.

துறவே வாழ்வின் அறம் என்று சாத்தனார் வற்புறுத்துவதாகக் கூறவியலாது. நாட்டின் சூழ்நிலை கெட்டுவிட்டால் அவற்றைத் திருத்த வாயுரைகள் மட்டும் போதா என்பதும், துறவுள்ளம் கொள்வது சூழ்நிலையில் உள்ள தாழ்வைப் போக்கவே என்பதும் அவர் உணர்த்துகின்றார் என்று கூறலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த நோக்கம் விளங்க வேண்டுமெனில், யாவரும் பசியற்று வாழ வேண்டுவது அடிப்படை என்பதை விளக்குகின்றார். நீரில் விளையும் உணவு நாட்டில் உள்ளார் அனைவர்க்கும் வேறுபாடில்லாமல் கிடைக்கவேண்டும் என்ற கருத்தை உணர்த்தவே அமுத சுரபி என்னும் பாத்திரத்தைத் தம் கற்பனைத் திறத்தால் படைத்து அவள் கையில் சேருமாறு அமைக்கிறார். உலகத்தில் ஏதாவது ஒரு நன்னெறி தோன்றி, அதனால் எல்லார்க்கும் உணவு கிடைத்து வாழ்வு செழிக்க வேண்டும் என்ற கருத்தையும்,அத்தகைய நன்னெறியைச் செயற்படுத்தத் தக்கவர் பற்றற்ற துறவுள்ளம் கொண்டவரே என்பதையும் உணர்த்த அமுதசுரபியைப் படைத்து அது மணிமேகலையின் கையில் வருவதாக நிகழ்ச்சியை அமைத்திருக்கிறார் என்று கூறலாம்.

துறவின் பயன் நாட்டுக்குச் செய்யும் நல்ல தொண்டாகும் என்பதைக் காடடவே மணிமேகலையின் வாழ்வில் ‘காணார்