பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

181


தனிமங்களின் அணுக்களைப் பயன்படுத்திப் பிசித19 அணுத் திரளைகளை20 உண்டாக்குகின்றன. உயிர்ப் பொருள்களின் இழையங்களின் பெரும் பகுதி பிசித அணுத்திரளைகளைக் கொண்டவை. இந்தப் பிசித அணுத்திரளைகளும் மின்சார சமனிலையுடையவை. பல்லாயிரக்கணக்கான எதிர்மின்னிகள் அணுக்கருக்களில் அவற்றிற்குச் சமமான எண்ணிக்கையுள்ள நேர் மின்னிகளுக்குச் சமமாக இருப்பதால், அணுத்திரளைகள் யாவும் மின்சார - சமநிலையுடையவையாக இருக்கின்றன.

தொடர்ந்து விரைவாக நடைபெறும் உயிர் வாழ்க்கை பற்றிய செயல்கள் பல்வேறுபட்டவை. அவற்றுள் சில : இழையங்கள்21 வளர்ந்து சிதைகின்றன; ஊட்டச் சத்துக்கள்22 புதிய இடங்களைப் பெறுகின்றன ; கழிவுப் பொருள்கள் அகலுகின்றன ; தசைகளில் ஆற்றல் உண்டாகின்றது; முழு உயிரியும் திரும்ப உண்டாகின்றது. டாக்டர் ஸ்கோயென்ஹீமர் என்ற அறிவியலறிஞர் இத்துறையில் ஆராய்ந்து உடல் முழுவதும் பன்னிரெண்டு மாதங்களுக்கொருமுறை திரும்பவும் உண்டாகிறது என்று கண்டறிந்திருந்தார். நாம் உண்ணும் கொழுப்புப் பொருளும் புரதமும் உடனே ஆற்றல் உண்டாக்குவதற்கோ இழையம் உண்டாவதற்கோ பயன்படுத்தப் பெறுவதில்லை. புதிதாக உண்ட கொழுப்புப் பொருள் கொழுப்பு இழையங்களில் படிய, முன்னரே இருந்த கொழுப்பு ஆற்றலை உண்டாக்குவதற்குப் பயன்படுகின்றது. அங்ஙனமே, புதிதாக உண்ட புரதம் இழையம், தசை, நரம்பு ஆகியவற்றின் உயிரணுக்கள் உண்டாவதற்குப் பயன்பட, முன்னர் இருந்த புரத அணுத்திரளைகள் நீக்கப் பெறுகின்றன ; ஆக்ஸிகரணமாகின்றன. அல்லது கழிவுப் பொருள்களாக அகற்றப் பெறுகின்றன. கதிரியக்க ஓரிடத்தான் ஆராய்ச்சியால் அவர்கண்ட உண்மை உறுதிப்பட்டது. அன்றியும், எலும்பும் புதிதாக உண்டாகிறது என்றும் அறியப் பெற்றுள்ளது.


19பிசிதம்-protein.20அணுத் திரளை-molecule. 21இழையம்-tissue. 22ஊட்டச் சத்து-nutrient