பக்கம்:அதிசயப் பெண்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அதிசயப் பெண்

“அது சந்தனக் குழம்பு என்று எனக்குத் தெரியாதா? வேகாத கட்டை சந்தனக் கட்டை; அதன் குழம்பு சந்தனக் குழம்பு. அதனே என்மேலே ஊற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகும்.”

“இரண்டு மாட்டின்மேல் தூங்குவதைப் பார்த் திருக்கிறீர்களா?’ என்று கடைசிக் கேள்வியைக் கேட்டாள் வித்தியாவதி.

“நான்கூடத்தான் கால்மாடு, தலைமாடு ஆகிய இரண்டு மாட்டின் மேல் துாங்குகிறேன். நீ தூங்குவது அதிசயம் அல்லவே!” என்று சு கு மாரன் சொன்ன போது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“எங்கள் தகப்பனர் எல்லாரையும் ஏமாற்றிவிட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடியவில்லை” என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/12&oldid=1104929" இலிருந்து மீள்விக்கப்பட்டது