பக்கம்:அனிச்ச மலர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அனிச்ச மலர்


"தட்டட்டும், பரவாயில்லே. நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ". காட்சி தயாரிப்பளார் விரும்பிய படியே கதாநாயகி குப்புறச் சாய்ந்து படுத்தநிலையில் முதுகும், இடுப்புக்கு அப்பாலும் தூக்கலாகத் தெரிகிறாற் போலவே எடுத்து முடிக்கப்பட்டது.

"பப்ளிஸிட்டிக்காரன் கிட்டச் சொல்லிப் போடணும். இந்த ஸீன்தான் முதல் வால்போஸ்டர். சூந்தள குமாரியோட மூஞ்சியை காமிக்கறதைவிட நம்ம சுமதியோட முதுகைக் காமிக்கிறத்துக்கு எவ்வளவோ பப்ளிஸிட்டி 'வேல்யூ' அதிகமாக இருக்கும்னேன்” என்று தமக்குத்தாமே சொல்லி மெச்சிக் கொண்டார் தயாரிப்பாளர்.

படப்பிடிப்பு முடிந்த பின்னும் நீண்ட நேரம் வரை தான் அதற்கு எப்படிச் சம்மதித்தோம் என்று சுமதிக்கு தன்னையே நம்ப முடியாமல் இருந்தது. படத்தில் முகம் தெரியாது என்பதால் ஆறுதலாகவும் இருந்தது . தயாரிப்பாளர் கொடுத்ததாக மேலும் இருநூறு ரூபாயைச் சுமதியிடம் கொடுத்தாள் மேரி.

"இந்தப் படத்தை நல்லா வந்திருக்கா இல்லியான்னு எப்போ நான் பார்க்கலாம்?" என்று சுமதி மேரியைக்கேட்டாள்.

"அடுத்த வாரக் கடைசியிலே தரணி ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் 'ரஷ்' போட்டுக் காட்டுவாங்க அப்போ உன்னையும் கூப்பிடுவாங்க, வந்து பாரு" என்றாள் மேரி.

"அவுட்டோர் ஷுட்டிங் முடிந்த தினத்தன்று மாலை கல்லூரி விடுதி வாயில் வரை தயாரிப்பாளரின் காரிலேயே சுமதியைக் கொண்டு வந்து 'டிராப்' பண்ணினாள் மேரி. சுமதிக்கு ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. அதனால்தான் அவள் அந்தப் படத்தில் ரஷ்களை பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். தான் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற பதற்றம் சுமதிக்கு உள்ளுற இருந்தது; மிகவும் தந்திரமாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/102&oldid=1397019" இலிருந்து மீள்விக்கப்பட்டது