பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்

49

மக்கள் ஒரு தலைமுறைக்கு முன் சிரிப்பது வழக்கம். ஆனால், அத்தகைய உயிர் வகை இருந்தது கட்டுக்கதையன்று, உண்மையே என்று இன்று ஐயமற விளங்குகிறது.

1931 இல் அமெரிக்காவிலுள்ள டெக்லாஸ் (Texas State) நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பாரிய எலும்பு இதன் அளவையும் இயல்பையும் காட்டுகிறது. இதன் பெயர் ப்ளையோஸராஸ் என்பது. இது கிட்டத்தட்ட 75 ஆடி நீளமுள்ளது. அதன் தலையின் அகலம் ஒன்றரை அடி அதன் கழுத்து மட்டிலும் 25 அடிக்குமேல் நீளமுள்ளது. இலெமூரியர் நெருங்கப் பெரிதும் அஞ்சிய உயிர் வகைகளுள் இதுவும் ஒன்று.

66

இலெமூரியாவில் மிகுதியாய் உறைந்த நில உயிர் வகை இலெமூர்" என்பதாகும். இது மனிதரது தோற்றம் கொண்ட து ஒருவகைக் குரங்கினம். இதிற் பலவகைகளிருந்தனவாயினும், சில இடங்களில் தற்கால மனிதர் உயரமாகிய ஆறடிவரை இது வளர்ந்திருந்தது. இதற்குக் குரங்கைவிடக்கூட நீண்ட வால் உண்டு. ஆனால், மற்றவகைகளில் அது மனிதரை ஒத்திருந்தது.

இதன் கைவிரல்கள் ஐந்தும் குரங்கின் விரல் போல் ஒரே புறமாய் இராமல் மனிதர்களின் விரல்களைப் போல 4 விரல்கள் ஒரு புறமும் பெரிய விரல் எதிர்ப்புறமும் ஆக அமைந்திருந்தன. கால் விரலமைப்பும் குரங்கை ஒத்திராமல் மனிதனை ஒத்திருந்தது.

இவற்றைக் கூர்ந்து நோக்கிய பழைய பழங்கால ஆராய்ச் சியாளர் இவ்வினமே அந்நாளைய மனித இனம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால், இலெமூரிய மக்களின் உயரிய நாகரிகமும், பிறவும் நேராக இன்று அறியப்படுகின்றமையால் இவை மக்களின மல்ல என்று சொல்லப்படுகிறது.

ஆசிரியர் டப்ஸ்யூ எஸ். கார்வே என்பார், 'மக்களினம் என்றும் குரங்கினத்துடனோ வேறு கீழினத்துடனோ உறவு கொண்டிருக்கவில்லை. படைப்புக் காலத்தில் தானே மனித னமாகப் படைக்கப்பட்டது' என்று கொள்கிறார்.

எப்படியாயினும் இலெமூரியர் காலத்தில் மனிதர் விலங்கு நிலையிலில்லை; மிக உயர்ந்த மனித நிலையிலேயே இருந்தனர் என்பது மட்டும் கண்கூடு.