மலைநாட்டு மங்கை
18.
19.
20.
21.
119
தெய்வத்துக்குக் கள், பன்றி, கோழி முதலியவற்றைப் பலி கொடுத்துப் பூசை செய்கிறார்கள். (மூல ஆசிரியர்)
தோளணியும் அரைக்கச்சையும் (ரிஹா-மேகலா) அசாமியப் பெண்களின் முக்கிய அணி ஒப்பனைகள். (இந்தி மொழிபெயர்ப்பாசிரியர்)
இப்பாடல் ஆங்கிலத்தில் கோல்ட்ஸ்மித் (Goldsmith) என்ற கவிஞரின் ‘பாழடைந்த கிராமம்' என்ற பாடலின் சில அடிகளின் மொழிபெயர்ப்பாக இவ்வத்தியாயத் தலைப்பில் தரப்பட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் பாடல் வரிகள் வருமாறு:
The bashful virgin's sidelong looks of love
The Matron's glance that would those looks reprove
The were thy charms, Sweet Village!
து
Sports like these with sweet succession
Taught even toil to please.
இது மீரீ மக்கள் அனைவரும் சமய வழிபாட்டில் கூடும் இடம். மீரீ மக்கள் பரண்மீதமைந்த குச்சு வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் அம்பலமும் பரண்மீதே கட்டப்படுகிறது.
அசாம் பகுதியில் இராச்சேவை மிகவும் பிரபலமான சமய உட்குழு மரபு ஆகும். இந்தச் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மக்கள் தேர்ச்சி பெற்ற பக்தர்கள் என்று கூறப்படுகிறார்கள். இதில் எல்லா வகுப்பு மக்களும் உண்டு. இந்த மரபின் மூல வடிவம் எது என்பதுபற்றி இன்னும் சரிவர விவரம் தெரியக் கூடவில்லை. ஆனால் அவர்கள் 'சேவை' இரவிலேயே நடைபெறுகிறது. இரவிலேயே முடிந்து விடுகிறது.
இந்தச் சேவையிடையே கோபீதரா, நாகா கீர்த்தனம், பூல கீர்த்தனம். திகம்பரி முதலிய பலவகைச் சடங்குகள் உண்டு. ஆனால் இவற்றின் பெயர்களை மட்டும் கேள்விப் படுகிறோமே தவிர, விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எப்படியும் இதுபோன்ற உட்குழு மரபுகள் எங்குமே இருப்பவை தாம். சில்ஹட் மாவட்டத்தில் 'கிஷோரி பஜனம்' என்ற ஒரு உட்குழு மரபினைப்பற்றிக் கேள்விப்படுகிறோம். பண்பட்ட மேற்கத்திய மக்களிடையே, ஐரோப்பாவில் 'லாஸ்' அல்லது 'ஃப்ரீமேசன்' என்ற பெயருடன் ஒரு வினை முறை இருந்து வருகிறது. சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக இது நம்மிடையே நடந்து வந்தபோதிலும் இந்த வினைமுறைகளின் இரகசியம் யாருக்கும் தெரியாது. எத்தனையோபேர் வித்துவான்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளவர்கள் ஏதோ ஓர் ஆர்வத்தால் தூண்டப்பட்டு இதில் தீட்சிக்கப்பட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்கள் தீட்சை பெறாதவர்களிடம் தம் இரகசியங்களைக் கூறுவதில்லை. சொந்த மனைவி மக்களுக்குக்கூட அவர்கள் இந்த இரகசியத்தை வெளியிட்டுக் கூறுவதில்லை. ஏன் வெளியிட்டுக் கூறுவதில்லை, தாம் பின்பற்றும் ஞான ஒளியினை உலகில் பரப்புவதற்கு அவர்கள் ஏன் விரும்புவதில்லை என்பதை நம்மால் அறியக் கூடவில்லை. (மூல ஆசிரியர்)