பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

(209

பல்லக்குத் தூக்குபவர்கள் கிளர்ச்சியுடன் பல வகைக் கூச்சல்கள் கிளப்பினர். யாரோ ஒருவர் தூண்டுதலால் கூச்சல்கள் சூரிநம்பூதிரியின் புகழ் ஆரவாரமாயிற்று. அதில் பல்லக்குக் காரர்கள் மட்டுமின்றி ஊர்வலத்தார் முழுவதும் பார்வையாளர் கூடக் கலக்கத் தொடங்கினர். பூவள்ளித்தர வாட்டினர் கேட்ட பேராரவார முழக்கம் இதுவே.

ஊர்வலமும் பரிவாரமும் இவ்வளவானால், இவற்றுக்குரிய குபேர மன்னர் எவ்வாறிருப்பாரோ என்றறியும் ஆர்வம் மக்களிடையே எழுந்தது. பூவள்ளியில் பகவதி கோயிலிலும் ஊட்டுபுரைகளிலும் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு விசிறியுடன் ஓய்வு கொள்ளத் தொடங்கியவர்கள்கூட, தம் பெருந் தொந்தியைப் பொருட்படுத்தாது குளங்களின் கரைமதில்களில் வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

பஞ்சுமேனவன் உள்ளம் இக்காட்சிகளால் பூரிப்படைந்தது. அந்தப் பூரிப்பு கேசவன்நம்பூதிரிமீது அவருக்கிருந்த சலிப்பை அகற்றி அவருடன் முன்னிலும் பன்மடங்கு அளவளாவும்படி தூண்டிற்று. அவரைத் தம்முடன் அழைத்துகொண்டு, அவர் வரவேற்பாளர் குழுவின் முன்னணியில் முதல் வரிசையில் சென்று காத்து நின்றார்.

பல்லக்கு தெருக்களில் நுழைய முடியாமல் கூட்டத்தை அப்புறமும் இப்புறமும் தள்ளி நெளிந்து நெளிந்து வந்தது. முன்னும் பின்னும் சென்ற ஆனைகுதிரைகளும் படைகள் போல அணி அணியாகச் சென்ற பரிவாரங்களும் இல்லாதிருந்தால் பல்லக்கு அத்திரளில் வழியுண்டுபண்ணி முன்னேறி யிருக்கவே முடியாது.

சூரிநம்பூதிரியின் ஊர்வலம் அடுத்து வந்ததே தரவாட்டாட் களும் கூக்குரலிடத் தொடங்கியிருந்தனர். பூமுகத்திலிருந்து சிறிது தூரத்தில் வந்து காத்து நின்ற பஞ்சுமேனவனையும் கேசவன்நம்பூதிரியையும் கண்டதே சூரியின் ஊர்வலத்தின் முன்னணி இரு கிளையாகப் பிரிவுற்று அவர்களைக் கடந்து பூவள்ளி மனையகம் சென்றது. பஞ்சுமேனவனும் கேசவன் நம்பூதிரியும் நம்பூதிரிப்பாட்டின் பல்லக்கை எதிர்நோக்கி நின்றனர்.