அப்பாத்துரையம் - 38
(242) ||__ __ பாளன் எதற்கு?” என்று கேட்டான். கிளஸ்டர் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் பாதுகாப்பாளன் நிலையைத் துறந்தான்.
ஸஃபோக்கின் உள்ளம் இத்துடன் நிறைவடையவில்லை. அவன் கிளஸ்டரை முற்றிலும் அழிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான். கிளஸ்டரைப் போல எளிய உள்ளமும் மன நிறைவும் பெறாத 1கிளாஸ்டர்க் கோமாட்டி தன்னிலும் கீழ்நிலையிலிருந்து உயர்வுற்ற அரசியிடம் வெறுப்பும் பகைமையும் கொண்டாள். அது பெருகி அவள் பேரவாவுடன் ணைய, அவள் அரசனை அகற்றும் எண்ணங்கொண்டு பெண்ணியல்புக்கேற்ப மாயக்காரர் மூலம் யாவும் தெரிந்து கொண்டிருந்த ஸஃபோக் அவளைச் சமயம் பார்த்துக் கையும் மெய்யுமாகப் பிடித்து நாட்டுப் பகைமைக் குற்றஞ்சாட்டி, லண்டன் தெருவழியாக அவமதித்து நடத்திச் சென்று, பின் 2மான் தீவில் மீளாச் சிறையிலிட்டான். அதன்பின் அவன் செயலற்ற அரசனைப் புறக்கணித்து, அவன் பெயரால் கிளஸ்டர் மீதும் பொய்க் குற்றம் சாட்டி, அவனை பொஃபோர்ட்டு முதற்றலை மகன் மாடத்தில் சிறை வைத்தான். சின்னாட்களுக்குள் அவன் அனுப்பிய கொலைஞர் இருவர் நோய் வாய்ப்பட்டிருந்த கிளஸ்டரை மூச்சுத்திணற வைத்து வதைத்துக் கொன்றனர்.
5. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
இதுவரை அரசியின் செல்வாக்கு மூலம் ஸஃபோக்குக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வந்தது. பெருமக்களிடையே அச்செல்வாக்கு எத்தகைய ஊறும் இல்லாதது கண்டு அவன் தருக்கினான். பொது மக்களைப் பற்றியோ அவர்கள் நல்லெண்ணத்தைப் பற்றியோ அவன் எண்ணவே இல்லை. ஆனால், தம் நாட்டின் உயர் தகுதிபற்றி ஐந்தாம் ஹென்ரியின் ஆட்சிமுதல், வீறும் பெருமையும் கொள்ளத் தலைப்பட்ட அவர்கள், அவ்வரசன் வெற்றியால் கிடைத்த நாட்டை முன்பின் பாராது விட்டுக் கொடுத்த ஸஃபோக்மீது வரவரக் கொதிப்படைந்து வந்தனர். கிளஸ்டர் கொலைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே உலர்ந்த பஞ்சுப் பொதியில் தீப்பொறி பட்டது போலாயிற்று. அவர்கள் ஸாலிஸ்பரி, வார்விக் ஆகிய ஸஃபோக்கின் எதிரிகள் தலைமையில், சின்னாபின்ன முற்றும் சிதைந்து உரு மாறிவிட்ட கிளஸ்டர் உடலுடன் அரசர் முன் வந்து, “ஸஃபோக் ஒழிக. ஆங்கிலநாட்டுப் பகைவன் ஒழிக”, என்று