பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. சிங்கமுகாசுரனும் தங்கமுகாசுரனும்

பாரத வீரன் வரலாறு வீர பாரதமாக மணிப்புலவனால் எழுதப்பட்டது. தனிக் காட்டு மன்னன் அவைப் புலவன் ஒருவன் அதையே நாடகக் காட்சிகளாக்கினான். புதிய படக்காட்சிக் கழகமொன்று அதையே படம் எடுத்தது. மக்கள் இவற்றைக் கண்டு களித்தனர், புகழ்ந்தனர். அரசனும் அரசியும் அதைத் தாமே திறந்து வைத்தனர். வீரனையும் பாங்கனையும் விட அவர்கள் வந்திருந்து விரும்பி அழைத்துச் சென்றனர்.

பாரத வீரனும் பாங்கனும் தத்தம் கதையைத் தாமே கண்டு களித்தனர். பாரத வீரன் அதைப் பெருமித எக்களிப்புடன் பார்த்தான். ஆனால் பட்டி மந்திரியோ, மிகுந்த பணிவுடனும், பண்புடனும் அதை நோக்கியிருந்தான்.

'காட்சி உனக்குப் பிடிக்கவில்லையா?' என்று வீரன் பாங்கனைக் கேட்டான்.

'இப்போது எனக்கு இருக்கும் அறிவு முன்பே எனக்கு இருந்தால், பல பிழைகளை நான் விலக்கியிருப்பேன்” என்றான் பட்டி

"ஒருவேளை பாங்கனாக நீ பணி செய்ய ஒத்துக் கொண்டிருக்கமாட்டாய் போலும்!" என்றான் பாரத வீரன்,

குறும்பாக.

"தாங்கள் கூறுவது முற்றிலும் சரியல்ல. ஆண்டே, ஏனென்றால் அது ஒரு பிழை என்று நான் முன்பும் கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. மூலகாரணங்கள் பணம் திரட்டும் ஆசையும், அரசனாகும் பேராசையும்தான். இரண்டும் இப்போது அகன்றுவிட்டன. இந்த ஆசைகளில்லா விட்டால் நான் பாங்கனாயிருக்கமாட்டேன் என்பது உண்மை. ஆனால் இப்போது நான் அந்த ஆசைகளை விட்டுவிட்டேன். ஆனால்