88
அப்பாத்துரையம் - 45
தலைமையிலுள்ள பெரும்பான்மைக் கட்சியான போல்சிவிக் கட்சியும் முதன்மை வகித்தன.
1915இல் சிம்மர்வால்டியில் மிதவாதக் கட்சி கூடிப் பெயரளவில் போரைக் கண்டித்தது. அடுத்த ஆண்டில் தீவிரக் கட்சி கீந்தாலில் கூடிப் பொதுவுடைமைத் தத்துவப்படி போரை ஏகாதிபத்திய முதலாளித்துவப் போட்டி என்று குறிப்பிட்டு உடனடி அமைதி கோரிற்று. உருசியப் பொது மக்கள் ஒரு புறமும் உலகத் தொழிலாளர் மற்றொரு புறமும் போரைப் பெரிதும் வெறுத்திருந்தனர். ஐரோப்பிய வல்லரசுகளும் மிதவாதிகளும் போரெதிர்ப்பை அசட்டை செய்ததினால், தீவிரப் பொதுவுடைமைக் கட்சி விரைவில் உருசியாவின் மக்களாதரவு பெற்ற தேசியக் கட்சியாகவும், ஐரோப்பாவில் தொழிலாளர் வகுப்பின் ஆதரவு பெற்ற உலகக் கட்சியாகவும் வளர்ந்தது.
உருசியாவில் பொதுவுடைமைக் கட்சியின் வெற்றிகள் பெரிதும் தேசிய வெற்றிகளும் அரசியல் வெற்றிகளுமே. பொதுவுடைமை நோக்கிப் புரட்சிப் பாதையில் சென்ற அதன் தொடக்க ஆர்வம் தேசத்தின் சூழ்நிலைகள் காரணமாகவே ஓரளவு தடைப்பட்டுள்ளன. ஆயினும் உருசியாவின் தேசிய முன்னேற்றத்தை இது தடுக்கவில்லை. உருசிய மக்கள் ஆர்வம் இத் தடைகளை மீறி வளரும் என்பது உறுதி. உலகப் பொதுவுடைமை இயக்கமும், சமதர்ம இயக்கமும் இதனால் புத்தாக்கம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.
உ