பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

131

கவிதைகளே. ஆயினும் பெருங்காப்பியம் எழுதும் வகையில் மில்ட்டன் ஒருவருக்கன்றி ஆங்கிலக் கவிஞர் எவர்க்கும் வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.

துறக்க வீழ்ச்சியின் கதை விவிலிய நூலில் கூறப்பட்ட மனிதனின் வீழ்ச்சிக் கதையே ஆகும். இறைவன் இயற்றிய துறக்கம் அல்லது பொன் னுலகில் முதல் மனிதன் ஆதாமும், முதல் மாது ஏவாளும் வாழ்ந்ததும்; இறைவனாணை மீறிய இறைவனின் பகைவனாகிய சைத்தானது உரைக் கிணங்கி அறிவு மரத்தின் கனியை அவர்கள் உண்டதும், அதன் பயனாக உலகில் தீவினை, நோய், முதுமை, சாக்காடு ஆகியவை ஏற்பட்டதும் இக்கதையின் விவரங்கள்.

இந்நூலின் முதல் எடுத்த “மனிதன்றன் முதற் பிறழ்வையும்” என்ற எடுப்புடன், "தேவரும் வீரரும்” என்றெடுத்த ஹோமரது இலியதும், "கிடந்தது வடக்கண் ஆங்கே” என்றெடுத்த காளிதாசனது குமார சம்பவமும், "உலகம் யாவையும்” என்றெடுத்த கம்பர் இராமாயணமும், “உலகெலாம்” என்றெடுத்த பெரிய புராணமும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிற் சிறப்புடைய தாயினும், பொருட் செறிவிலும் ஓசை முழக்கிலும் பெருமித நடையிலும் இவை எல்லாம் பெரிதும் பொது ஒப்புமை யுடையன என்பதை அவற்றை வாசிப்போர் எளிதில் காணலாம். இவற்றில் காணும் இயற்கைக் காட்சிகள், மனித உணர்ச்சிகள், உயர் கருத்துக்கள் ஆசியவற்றைத் தொகுத்து ஒருங்கே தமிழ் மொழியில் வெளியிட்டால் பிறநாட்டினரே போன்று தமிழ் நாட்டினரும் அவற்றை ஒப்புமைப்படுத்தி உலகமுதற் கவிகளின் நலன்களைப் பருகுவர் என்பது உறுதி.

7. துறக்க மீட்சியும் முடிவும்

மில்ட்டனின் நண்பருள் "குவேக்கர்கள்” அல்லது நண்பர் கழகத்தைச் சேர்ந்த தாமஸ் எல்வுட் என்பவர் மில்ட்டனுக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் எழுதிய நூலின் நயத்தையும் சிறப்பையும் பாராட்டியதோடு துறக்கத்தின் வீழ்ச்சியைப்பற்றி இவ்வளவு எழுதியும் அதன் மீட்சிபற்றி ஒன்றும் காணோமே என்றாராம். அதன் பொருத்தத்தை உணர்ந்து மில்ட்டன் பின்னர்