பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. ஆட்சி முறை

அரசாங்கம் சமூக ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஒரு உறுப்பு அல்ல. அவ் வொப்பந்தம் சமூகம் தன்னுடனேயே ஏற்படுத்திக்கொண்ட ஒரு உடன்படிக்கை-ஆளப்படும் மக்கள் சமூகம் என்ற முறையில் அது தன்னைத் தானே ஆளும் சமூகம் ஆக்கிக்கொண்டு, அம்முறையில் அந்த ஆளும் சமூகம் அல்லது அரசியல் சமூகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் அது.

அரசியல் சமூகத்தின் சார்பில் ஆட்சியை மேற்கொண்ட திறமையுடைய குழு அல்லது திறமையுடையவர் வகுத்த குழுவே அரசாங்கம்.

ஆனால் ஆட்சி முறை அரசாங்கத்துக்கு முற்பட்டே தொடங்கிவிட்டது. இன்றும் சட்ட வகுப்புத் துறை இதைக் காட்டுகிறது. புதிய அரசாங்கம் அமைக்கும் சட்ட வகுப்புத் துறையை நாம் இன்றும் மரபுமன்றம் (Convention) என்று கூறுகிறோம்.

ஆளப்படும் குழு அப்படியே ஆட்சிக் குழுவாய் இருக்க

முடியுமா?

பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ஆட்சி முறைக் காரியங்களைத் தானே ஆற்ற நேரிடும்போது தன்னைத்தானே நிறை குழு (Grand Comittee) ஆக்கிக் கொள்கிறது. நிறை குழுவாக இருந்து அது வகுத்த திட்டத்தை, அரசியல் மன்றமாக இருந்து அதுவே ஆராய்கிறது!

இன்றும் அரசாங்கம், ஆட்சியுரிமைக் குழுவாகிய அரசியல் சமூகத்தின் பிடியை விட்டுத் தப்பியோடுவ துண்டு. அதுவே சட்டமில்லாத, மன்றமில்லாத தான்தோன்றி ஆட்சி.