பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ) சுந்தர சண்முகனார்

வணக்கம்

ஒருவரை ஒருவர் காணும்போது, நமஸ்தே நமஸ்காரம் எனச் சமசுகிருதத்திலும் Good Morning Good Evening என ஆங்கிலத்திலும், Bon Jour-Bon Soir எனப் பிரெஞ்சிலும், அஸ்ஸலாமு அலைக்கும்' என அரபு மொழியிலும் கூறிக் கொள்வது நீண்ட காலமாகத் தமிழகத்தில் ஒரு மரபாக இருந்து வந்தது. இந்தக் காலத்தில் தமிழர்க்கு ஒரளவு மான உணர்வு ஏற்பட்டதன் விளைவாக "வணக்கம்' என்று கூறும் மரபு பெரும்பான்மையாக உள்ளது. இந்தச் சொல்லைக் கம்பர் பயன்படுத்தி யுள்ளார். சுமந்திரனிடம் சீதை சொல்வதாக உள்ளது இது. அரசர்க்கும் (தயரதனுக்கும்) அத்தைமார்க்கும். தனது வணக்கத்தைத் தெரிவிக்கும்படி சீதை கூறினாள்:

அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பி...

(39)

என்பது பாடல் பகுதி.

குகப் படலம்

நாள் முதல்

ஒரு நாளின் தொடக்கப் பகுதியாகிய- முதல் பகுதியாகிய காலை நேரத்தை நாள் முதல்' என்னும் தொடரால் கம்பர் குறிப்பிட்டுள்ளார். நாள் முதலில் இராமன் (காலைக்) கடனை முடித்தானாம்:

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடரப் போனான்

(26). என்பது பாடல் பகுதி.